×

பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை ஒன்றியங்களில் திமுக வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு

பள்ளிப்பட்டு, டிச. 24: பள்ளிப்பட்டு  ஒன்றியத்தில் 33 ஊராட்சிகள், 12 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட கவுன்சிலர், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கு வரும் 27ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில்   திமுக மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் உட்பட சுயேட்சை வேட்பாளர்கள் ஆதரவாளர்களுடன் காலை முதல் இரவு வரை வீடு வீடாக சென்று தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். 1வது வார்டு  மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு திமுக வேட்பாளராக போட்டியிடும் கவிதா ரவீந்திரா, 9வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர் முனியம்மா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.    

4வது வார்டு மாவட்ட கவுன்சில பதவிக்கு திமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள பி,பழனி  நெடுங்கல்,  கீச்சலம், ராமசமுத்திரம் ஆகிய  பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டார். ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் 5வது வார்டு  மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் மணி.  4வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு அதிமுக வேட்பாளர் ஜெ.பாண்டுரங்கன்,ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு  திமுக காங்கிரஸ் கூட்டணி ஆதரவுடன் போட்டியிடும்  ஆனந்தி செங்குட்டுவன் , அம்மையார்குப்பம்  ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் சி.ஜி.கார்த்திகேயன் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளுன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Tags : DMK ,Pallipattu ,RKBate Unions ,
× RELATED தூத்துக்குடி தொகுதியில் மீண்டும்...