×

மொத்த வாக்காளர்கள் 10,00,581 பேர் திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலைய மேற்கூரை கான்கிரீட் பெயர்ந்து விழுவதால் பயணிகள் அவதி

திருத்துறைப்பூண்டி, டிச.24: திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலைய மேற்கூரை கான்கிரீட் பெயர்ந்து விழுவதால் பயணிகள் அவதியுற்று வருகின்றனர். இதனை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.இந்த பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு வெளியூர்களுக்கு தினந்தோறும் 1000க்கும் மேற்ப்பட்டோர் பொதுமக்கள், மாணவர்கள், அரசு அலுவலர்கள் சென்று வருகின்றனர்.இந்தநிலையத்தில் பொதுமக்கள்நிற்க முடியாத அளவிற்கு ஆக்கிரமிப்புகள் உள்ளது.இது ஒருபுறம் இருக்க பேருந்து நிலையம் சேதம் அடைவதும் அவ்வப்போது சீரமைப்பதும் வாடிக்கையானது ஒன்றாகும்.தற்போது மீண்டும் சேதம் அடைந்து கான்கிரீட் மேற்கூறைகள் பெயர்ந்து கீழேஅடிக்கடி விழுகிறது.

பெரிய அளவில் விபத்துகள் ஏற்படுவதற்கு முன்பு சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிநகர செயலாளர் ரகுராமன் கூறுகையில், புதிய பேருந்து நிலையம் கான்கிரிட் மேற்கூரைவிழுந்து பல பேருக்கு சிறியகாயம் ஏற்பட்டு வருகிறது. உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன்பாக புதிய பேருந்து நிலையத்தை சீரமைக்க வேண்டும். மேலும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள ஆக்கிரப்புகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : voters ,collapse ,bus stand ,Thirupuraipoondi ,
× RELATED சட்டமன்ற உறுப்பினர்கள்...