×

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

திருவாரூர், டிச.24: திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே தேசிய வங்கியின் ஏடிஎம் ஒன்றில் கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே அத்திக் கடையில் தேசிய வங்கி கிளை ஒன்று உள்ளது. இந்த வங்கியின் இடதுபுறத்தில் அடுத்த கட்டிடத்தில் ஏடிஎம் மையம் ஒன்றும் இயங்கி வருகிறது. இந்த மையத்திற்குள் நேற்று அதிகாலையில் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த இயந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயற்சித்துள்ளனர்.இருப்பினும் அந்த இயந்திரத்தினை சரிவர உடைக்க முடியாததால் கொள்ளை முயற்சியினை பாதியிலேயே விட்டு விட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர். பின்னர் ஏடிஎம் மையம் உடைக்கப்பட்டு கிடந்தது குறித்து கொரடாச்சேரி போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர். சம்பவம் குறித்து அந்த வங்கி கிளை மேலாளர் வினித் குமார் என்பவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து போலீசார் தேடி வருகின்றனர். இயந்திரத்தை உடைக்க முடியாததால் பல லட்ச ரூபாய் தப்பியது.

Tags :
× RELATED தமிழகத்திற்கு பிரதமர் அடிக்கடி...