×

அதிராம்பட்டினம் அருகே மினிலாரி கவிழ்ந்து 3 பேர் காயம்

அதிராம்பட்டினம், டிச. 24: அதிராம்பட்டினம் அருகே தென்னை மட்டை ஏற்றி வந்த மினி லாரி கவிழ்ந்து டிரைவர் உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர். அதிராம்பட்டினம் அடுத்த மாளியக்காடு பஸ் நிறுத்தம் அருகில் தென்னை மட்டைகள் ஏற்றி வந்த ஒரு மினி லாரி கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் தேங்காய் மட்டைகள் சிதறிய நிலையில் கிடந்தன. இந்த தகவல் கிடைத்ததும் அதிராம்பட்டினம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், லாரியின் முகப்பு கண்ணாடியை உடைத்து 3 பேர் படுகாயத்துடன் தப்பித்தனர். ஆனால் லாரி எங்கிருந்து வந்தது, லாரியில் வந்தவர்கள் யார் என்பது குறித்து தெரியவில்லை என்றார். இதையடுத்து லாரி எங்கிருந்து வந்தது, அதில் வந்தது யார், காயமடைந்தவர்கள் எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Minilari ,Adirampattinam ,
× RELATED திருவெறும்பூர் அருகே மினிலாரி மோதி மீன் வியாபாரி பலி