×

அரியலூர் மாவட்டத்தில் களை கட்டும் தேர்தல் பிரசாரம் வீதிகள் எங்கும் வேட்பாளர்கள்

அரியலூர், டிச. 24: அரியலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் இருகட்டமாக வரும் 27, 30ம் தேதிகளில் நடக்கிறது. இந்த பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துவிட்டு தங்கள் போட்டியிடும் வார்டுகளில் உள்ள முக்கிய நபர்களை சந்தித்து ஆதரவு சேகரித்தனர். தற்போது அனைத்து வேட்பாளர்களுக்கும் சின்னம் கிடைத்து விட்டதால் அந்த சின்னங்களை நோட்டீஸ்சில் அச்சடித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் எங்கு பார்த்தாலும் வேட்பாளர்கள் தான் தென்படுகின்றனர். இனால் கிராமம் முழுவதும் உள்ளாட்சி தேர்தல் கலை கட்டி வருகிறது.அனைத்து வீதிகளிலும் வேட்பாளர்கள், தொண்டள் சுற்றி திரிகின்றனர். மேலும் தலைவர், வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஒருவருக்கு ஒருவர் சின்னசின்னங்களை பெற்று அதனை நோட்டிஸ்சில் அச்சடித்து அதனை வாக்களர்களிடம் பேசி ஆதரவு திரட்டுகின்றனர். வேட்பாளர்கள் தங்கள் வெற்றியை நிலைநாட்ட பல யுக்திகளை கையில் எடுத்துள்ளதால் அரியலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் களை கட்டி வருகிறது.

Tags : Weed ,everywhere ,Ariyalur district ,
× RELATED அரியலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில்...