×

மாவத்தூர் ஊராட்சி வெங்கடேஸ்வரா நகர் மக்கள் தேர்தல் புறக்கணிக்க முடிவு

கடவூர், டிச. 24: மாவத்தூர் ஊராட்சி இரண்டாவது வார்டு வெங்கடேஸ்வரா நகர் பகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லையென பொதுமக்கள் குற்றம் சாட்டி தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். தரகம்பட்டி மற்றும் மாவத்தூர் ஊராட்சிக்குகிடையில் வெங்கடேஸ்வரா நகர் உள்ளது. இந்த நகர் மாவத்தூர் ஊராட்சிக்கு கட்டுப்பட்டதாகும். இந்த ஊராட்சியில் சுமார் 25க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் 10ஆயிரம் லிட்டர் கொண்ட மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி மற்றும் ஒரு சின்டெக்ஸ் டேங்க் உள்ளது. இங்கு ஆழ்குழாய் கிணறு பழுதடைந்ததால், அதுவும் மேட்டுப்பகுதியாக இருப்பதால் இந்த பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்க முடியவில்லை. மேலும் இவர்களுக்கு போதிய சாலை வசதிகளும் இல்லை. இவர்கள் இறுதி சடங்கு செய்ய வேண்டுமென்றால் சுடுகாடு கூட இல்லை. தரகம்பட்டிக்குத்தான் வர வேண்டும். வரிகள் அனைத்தும் மாவத்தூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் கட்டிவிட்டு போதிய வசதிகள் செய்து கொடுக்கவில்லை. இதனை கண்டித்து இந்த பகுதி மக்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Tags : Panchayat ,
× RELATED ஆதிச்சமங்களம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி அமைப்பு