×

வெங்கமேடு பெரியார் சாலையில் புதிய குடிநீர் குழாய் பதிக்க மக்கள் எதிர்ப்பால் பரபரப்பு

கரூர், டிச. 24: கரூர் வெங்கமேடு அருகே புதிய குடிநீர் குழாய் பதிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் நகராட்சி பகுதிகள் அனைத்தும் கடந்த சில மாதங்களாக மீட்டருடன் கூடிய புதிய குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளுக்காக அனைத்து சாலைப்பகுதிகள், தெருப்பகுதிகளில் பள்ளம் தோண்டி பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால், அனைத்து பகுதிகளிலும் சாலைகள் மோசமடைந்து வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று காலை கரூர் வெங்கமேடு பெரியார் சாலை பகுதியில் குடிநீர் இணைப்பு பணிக்காக பணியாளர்கள் வீடுகளின் முன்பு சாலையோரம் பள்ளம் தோண்டினர். அப்போது அங்கு சூழ்ந்த பொதுமக்கள், குடிநீர் இணைப்புக்காக பள்ளம் தோண்டுவதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. இதே பகுதியின் இரண்டு இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. அந்த பணிகள் முடிவடையாத நிலையில் தற்போது ஏன் பள்ளம் தோண்டி நன்றாக இருக்கும் சாலைகளை மோசமாக்கி வருகிறீர்கள் என கேள்விகள் கேட்டு முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்த பணிகளை பிறகு மேற்கொள்ளலாம் என்ற அடிப்படையில், தோண்டப்பட்ட பள்ளத்தை பணியாளர்கள மூடி விட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர். இந்த சம்பவம் காரணமாக இந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : road ,Venkamedu Periyar ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...