×

கிராம பூசாரிகள் பேரவை ஆலோசனை கூட்டம்

பொள்ளாச்சி,டிச.24: பொள்ளாச்சி அருணாச்சலேஸ்வரர் கோயிலில் நேற்று முன்தினம், கிராம பூசாரிகள் பேரவை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு, மாவட்ட அமைப்பாளர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். நகர அமைப்பாளர் பிரம்மகோவிந்தன் முன்னிலை வகித்தார். கூட்டத்தின்போது, பொள்ளாச்சி பகுதியில் ஏழ்மையில் இருக்கும் கிராம கோயில்களுக்கு பூஜைக்குரிய உபகரணங்களை இலவசமாக வழங்க வேண்டும். அனைத்து கோயில்களுக்கும் முழுநேர இலவச மின்சாரம் வழங்க வேண்டும். தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலங்களை மீட்க வேண்டும். கோயிலுக்கு சொந்தமான நிலத்தை தனியாருக்கு வழங்க கூடாது. அனைத்து கோயில் அர்ச்சர்களுக்கும், இந்து சமய அறநிலையத்துறையில் அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பன  உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags : Village Clergy Council Advisory Meeting ,
× RELATED உச்சநீதிமன்ற நீதிபதி முன்னிலையில்...