×

கோவை செட்டிபாளையம் பகுதியில் கல்குவாரி அமைத்தால் விவசாயத்துக்கு பாதிப்பு

கோவை, டிச. 24: கோவை செட்டிபாளையம் பகுதியில் விவசாய நிலத்திற்கு அருகில் கல்குவாரி அமைப்பதை தடுத்து நிறுத்தக்கோரி அப்பகுதி மக்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:
கோவை செட்டிபாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஓராட்டு குப்பை கிராமத்தில் புதிதாக கல்குவாரி அமைக்க தனியார் நிறுவனம் 5 ஆண்டுகளுக்கு அனுமதி பெற்றதாக தெரிய வருகிறது. இது விவசாயம் மற்றும் குடியிருப்புகள் நிறைந்த பகுதி. விதிமுறை மீறி விவசாய நிலத்திற்கு அருகில் கல்குவாரி அமைப்பதால் விவசாயம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கோழிப்பண்ணைகள் அருகில் இருப்பதால் கோழி வளர்ப்பும் பாதிக்கப்படுகிறது.வெடிவைத்து பாறைகள் உடைக்கப்படும்போது அந்த சத்தத்தால் கால்நடைகள் பாதிக்கப்படுகின்றன. பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே இதை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : area ,Kalkwari ,Kovai Chettipalayam ,
× RELATED கல்குவாரி நீரில் மூழ்கி மனைவி, மகன்...