×

கலசபாக்கம் அருகே வழிபறியில் ஈடுபட்ட 3 பெண்கள் கைது

கலசபாக்கம், டிச.22: கலசபாக்கம் அருகே வழிபறியில் ஈடுபட்ட 3 பெண்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கலசபாக்கம் அடுத்த கடலாடி அருகே உள்ள புதுபேட்டை கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி(58). இவரது வீட்டின் பின் பக்க கதவை உடைத்த மர்ம ஆசாமிகள் கடந்த 18ம் தேதி பீரோவை உடைத்து அதிலிருந்த 5 பவுன் தங்க செயினை திருடிச்சென்றனர்.

இதுகுறித்து, கடலாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிந்து மேல்செங்கம் அடுத்த கட்டமடூவு கிராமத்ததை சேர்ந்த காமாட்சி(45), நர்சம்மா(48), விஜயா(38) ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்து 5 சவரன் நகையை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : women ,Kalasakkam ,
× RELATED பெண் கைதிகள் சென்ற வேனில் தீ