×

ஏரல் அருகே பெயிண்டர் கொலை இழப்பீடு கேட்டு குடும்பத்தினர் மனு

தூத்துக்குடி, டிச.22: ஏரல் அருகே சிறுத்தொண்டநல்லூரை சேர்ந்தவர் சாகுல்ஹமீது (43). பெயிண்டர். கடன் பிரச்னையால் இவரை கடந்த 17ம் தேதி சிலர் காரில் கடத்தி சென்று அடித்து உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த சாகுல்ஹமீது தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனளிக்காமல் உயிர் இழந்தார். இது தொடர்பாக ஏரல் போலீசார், 2 பேரை கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
 இந்நிலையில் சாகும்
ஹமீதுவின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அந்த ஊரை சேர்ந்தவர்கள் பலர் நேற்று காலை தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள், கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். கொலை செய்யப்பட்ட சாகுல்ஹமீது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் சந்தீப்நந்தூரியிடம் மனு கொடுத்தனர்.

Tags : Painter ,Earl ,
× RELATED புதுச்சேரியில் கோயில் ஊர்வலத்தில் பெயிண்டர் கொலை வழக்கு: போலீஸ் வலை