×

கரூர் பாலம்மாள்புரத்தில் கழிப்பறையில் தண்ணீர் வசதி இல்லாததால் மக்கள் அவதி

கரூர், டிச. 22: தண்ணீர் வசதியில்லாத கழிப்பறையால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
கரூர் நகராட்சி பாலம்மாள்புரத்தில் நகராட்சி சார்பில் சுகாதார வளாகம கட்டப்பட்டுள்ளது. இந்த கழிப்பிடத்தில் தண்ணீர் வருவதில்லை. கழிப்பறை இருந்தும் தண்ணீர் வசதி செய்யாததால் அதனை பயன்படுத்த முடியாத நிலையில் மக்கள் உள்ளனர். நகராட்சி தேர்தலுக்கு முன்னரே இதுபோன்ற குறைகளை கவனித்து சரிசெய்வது வழக்கம். ஆனால் இம்முறை யாரும் கண்டுகொள்ளவில்லை. நகராட்சி தேர்தல் நடத்தாததால் கவனிக்காமல் விட்டுவிட்டார்களோ என்னவோ தெரியவில்லை என பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

Tags : bridge bridge ,Karur ,
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...