×

கந்தர்வகோட்டைக்கு அடிப்படை வசதிகள் கிடைக்க உடனே நடவடிக்கை எடுப்பேன்: வேட்பாளர் சிவா வாக்குறுதி

கந்தர்வகோட்டை, டிச.22: கந்தர்வகோட்டைக்கு அடிப்படை வசதிகள் கிடைக்க உடனே நடவடிக்கை எடுப்பேன் என வேட்பாளர் சிவா என்ற ஜெயக்குமார் வாக்குறுதி அளித்துள்ளார். கந்தர்வகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு இந்திரா நகரை சேர்ந்த லோடுமேன் கருப்பையா மகன் சிவா என்கிற ஜெயகுமார் ஆட்டோ ரிக்ஷா சின்னத்தில் போட்டியிடுகிறார். கடந்த 3 வருடங்களுக்கு முன் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்பு மனுதாக்கல் செய்திருந்தவர். தற்போது மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

இவருக்கு ஆட்டோ ரிக்ஷா சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. கஜா புயல் தாக்கிய சமயத்தில் தங்கள் பகுதிக்கு குடிதண்ணீர் பிரச்னை மற்றும் தெருவிளக்கு பிரச்னைக்கு முடிவுக்கு கொண்டு வர உறுதுணையாக இருந்துள்ளார். மேலும் இந்திரா நகர் பகுதி மக்களுக்கு மூன்று வருடங்களாக பட்டா மாறுதல், ஆதார் கார்டு எடுப்பது போன்ற பணிகளுக்கு உதவி செய்துள்ளார். என்னை தேர்ந்தெடுத்தால் தனது அப்பா லோடுமேன் கருப்பையா போல் மக்களுக்கு உதவியாக இருப்பேன். மேலும் அடிப்படை வசதிகள் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன் என உறுதி அளித்துள்ளார்.

Tags : Siva ,facilities ,
× RELATED அரியலூர் அருகே பெண்ணின் ஆபாச...