×

மாஜி படைவீரர்கள், போலீசார் விண்ணப்பிக்க அழைப்பு கூலிப்படை வைத்து சுகாதார ஆய்வாளருக்கு மிரட்டல்

பொன்னமராவதி, டிச.22: கூலிப்படை வைத்து சுகாதார ஆய்வாளருக்கு மிரட்டல் விடுத்த துணை செவிலியர் மற்றும் கூலிப்படையினர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. பொன்னமராவதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், சுகாதார ஆய்வாளராக தியாகராஜன்(51) என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த ஆஸ்பத்திரியில் தஞ்சை மாவட்டம், வளுத்தார் ரம்யா பழனியப்பன் என்பவரின் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இதையறிந்த சுகாதார ஆய்வாளர் தியாகராஜன் விசாரித்த போது, அக்குழந்தை பொன்னமராவதி தனியார் மருத்துவமனையில் பிறந்தது தெரியவந்துள்ளது. ஆனால் பொன்னமராவதி அரசு ஆஸ்பத்திரியில் பிறந்ததாக சான்று பெற்று உள்ளனர். இதை கண்ட தியாகராஜன் தனியார் மருத்துவமனையில் பிறந்தது என்று வாக்குமூலம் பெற்றுள்ளார். இந்நிலையில் கடந்த 17ம்தேதி தியாகராஜன் அஸ்பத்திரிக்கு பணிக்கு சென்றபோது, துணை செவிலியர் கீதா என்பவர் தகாத வார்த்தைகளால் திட்டியும், கூலிப்படையை வைத்தும் மிரட்டியள்ளார். இதுகுறித்து பொன்னமராவதி போலீசில் சுகாதார ஆய்வாளர் தியாகராஜன் புகார் செய்ததன் பேரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags : Maj ,Veterans ,health inspector ,
× RELATED 601 வீரர், வீராங்கனைகளுக்கு உயரிய...