திருச்சி, டிச.22: மணப்பாறை தாலுகா, அனியாப்பூர் கிராமம் வீரமலைப்பாளையத்தில் உள்ள துப்பாக்கி சுடும் இடத்தில், நாளை (23ம் தேதி), 24 ஆகிய 2 நாட்கள் காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை பெங்களூரு எஸ்டிசி பிஎஸ்எப் எலஹன்கா படையினரால் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெறுகிறது. அதுசமயம் மேற்கண்ட பயிற்சி தளம் உள்ள இடத்தில் மேய்ச்சலுக்காக கால்நடைகள் மற்றும் மனித நடமாட்டம் எதுவும் இருக்கக்கூடாது எனவும், குறிப்பிட்டுள்ள பயிற்சி தளத்தில் எவரும் பிரவேசிக்கக் கூடாது எனவும் திருச்சி கலெக்டர் சிவராசு கேட்டுக்கொண்டுள்ளார்.