×

வையம்பட்டி அருகே பரபரப்பு திருச்சி அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து சென்னை பெண் பலி

திருச்சி, டிச. 22: சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் மனைவி சுப்புலட்சுமி (40). இவர் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து மதுரைக்கு வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்றார். ரயில் திருச்சி அடுத்து பூங்குடி அருகே சென்ற போது ரயிலில் இருந்து தவறி விழுந்த சுப்புலட்சுமி, படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்தார். இதுகுறித்து வழக்குபதிந்த ரயில்வே போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Madras ,Vaiyampatti ,Parambaram Trichy ,
× RELATED எந்த அறிவியல்பூர்வமான ஆய்வும்...