×

ஆந்திர மாநில எல்லையில் ஆவின் பால் விற்பனை விழிப்புணர்வு பிரசாரம்

திருவள்ளூர், டிச . 22: தமிழக, ஆந்திர எல்லையோரம் உள்ள நகரி, புத்தூர் பகுதிகளில், ஆவின் அதிகாரிகள் கொண்ட குழு, பால் மற்றும் பால் உபபொருட்கள் விற்பனையை அதிகரிக்கும் வகையில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டுள்ளனர். தமிழ்நாடு எல்லையை சுற்றியுள்ள ஆந்திர மாநில பகுதிகளில் ஆவின் பால் மற்றும் பால் உபபொருட்கள் விற்பனை மேற்கொண்டு இருப்பதாகவும், தரமான பதப்படுத்தப்பட்ட பால் நாளொன்றுக்கு 68 ஆயிரம் லிட்டர் எனவும், பால் உபபொருட்கள் நாளொன்றுக்கு ரூ.4லட்சத்திற்கு விற்பனை மேற்கொள்வது எனவும் இலக்கு நிர்ணயித்து ஆவின் விற்பனை குழு செயல்பட்டு வருகிறது. ஆவின் விற்பனை மேற்கொள்ள சில்லறை விற்பனை முகவர்கள், மொத்த விற்பனை முகவர்கள் என 280 முகவர்கள் நியமனம் செய்ய இருப்பதாகவும், விருப்பம் உள்ளவர்கள், ஆவின் விற்பனை மேலாளர் உமாசங்கரை 9487307531 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு விற்பனை மேலாளர் தெரிவித்துள்ளார். 

Tags : Awareness Campaign ,border ,Andhra Pradesh ,
× RELATED ரேஷன் அரிசி, கோதுமை, பருப்பு, ஆயில் என...