×

கரூரில் இருந்து நெரூர் செல்லும் சாலையில் தடுப்பு சுவர் இல்லாத வாய்க்காலால் அபாயம்

கரூர், டிச. 22: வாய்க்கால் தடுப்பு சுவர் அமைக்காததால் விபத்து அபாயத்தில வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். கரூரில் இருந்து நெரூர் செல்லும் சாலையில் சதாசிவபிரமேந்திரர், காசி விசுவநாதர் கோயிலுக்கு செல்லும் சாலை வாய்க்கால் பாதை வளைவுகளில் செல்கின்றது. இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மட்டுமின்றி கோயிலுக்கு வரும் பக்தர்களும் இந்த பாதையை பயன்படுத்துகின்றனர். எனினும் வாய்க்கால் பாதையில் தடுப்புசுவர் இல்லை. வாய்க்காலில் தற்போது தண்ணீர் செல்கிறது. விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள் தினமும் சென்றுவருகின்றனர். இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் தடுமாற்றத்துடன் சென்று வருகின்றனர். வாய்க்கால்களில் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும். ஆங்காங்கே உள்ள வளைவுகளில் முன்னதாக தகவல் பலகை ஒளிஉமிழும் வகையில் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : road ,Karur ,Nerur ,
× RELATED 2000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட கரும்பு அறுவடை பணிகள் தீவிரம்