மதுரை, டிச. 22: மதுரை பழைய விளாங்குடியைச் சேர்ந்தவர் ரமேஷ். மனைவி முத்துமாரி. இவர்களது மகன் கூடல்நகரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். கடந்த 17ம் தேதி பள்ளியில் இருந்து முத்துமாரியை அழைத்துள்ளனர். இதன்பேரில் முத்துமாரி அங்கு சென்று பார்த்தபோது, அவரது மகன் கையில் காயத்துடன் இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தலைமையாசிரியையிடம் முத்துமாரி கேட்க, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது தலைமை ஆசிரியை மற்றும் சக ஆசிரியைகள் சேர்ந்து, அவரை தாக்கியதாக கூடல்புதூர் போலீசில் முத்துமாரி புகார் கொடுத்துள்ளார். இதன்பேரில் தலைமை ஆசிரியை மற்றும் பள்ளி நிர்வாகி உட்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.