திருச்செந்தூர், டிச. 19: குரும்பூரில் நண்பர் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். குரும்பூர் அருளானந்தபுரத்தை சேர்ந்தவர் ராமசாமி (27). கூலித்தொழிலாளி. இவரது வீட்டில் இவரும், இவரது நண்பரான அழகப்பபுரத்தை சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் கெங்காமுத்து (27) என்பவரும் நேற்று முன்தினம் இரவு மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது போதையில் இருந்த கெங்காமுத்து, ராமசாமி மனைவி இசக்கிமுத்துவை (25) ஆபாசமாக திட்டியதோடு கொலை மிரட்டலும் விடுத்தாராம். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்த குரும்பூர் எஸ்ஐ பாலகிருஷ்ணன், கெங்காமுத்துவை கைது செய்தார்.