×

கள்ளிக்குடி அருகே லாரி கவிழ்ந்து டிரைவர் பலி

திருமங்கலம், டிச. 19: கள்ளிக்குடி அருகே, லாரி கவிழ்ந்த விபத்தில்,   சம்பவ இடத்திலேயே டிரைவர் உயிரிழந்தார். தூத்துக்குடி மாவட்டம், கீழக்கரந்தை அருகே உள்ள பட்டிதேவன்பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகன் கண்ணன் (32), லாரி டிரைவர். மனைவி பாண்டிம்மாள். இவர்களுக்கு 9 மாத ஆண்குழந்தை உள்ளது. இந்நிலையில், கண்ணன் நேற்று அதிகாலை மதுரை சென்ட்ரல் மார்கெட்டிலிருந்து காய்கறி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு விருதுநகர் வழியாக தூத்துக்குடி சென்றார். கள்ளிக்குடியை அடுத்த மாவட்ட எல்லையான நல்லமநாயக்கன்பட்டி அருகே, கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது. இதில், லாரியின் அடியில் சிக்கிய கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அந்தவழியாக சென்றவர்கள் விபத்து குறித்து கள்ளிக்குடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், கண்ணனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Driver kills driver ,Kallikudi ,
× RELATED தகாத உறவிற்கு இடையூறு கழுத்தை நெரித்து கணவர் கொலை