×

இளம்பிள்ளை உழவர் சந்தையில் நடைபாதையில் மண் கொட்டி அடைப்பு

இளம்பிள்ளை, டிச.19:  இளம்பிள்ளையில் நடை பாதை மண் கொட்டி அடைக்கப்பட்டதால் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இளம்பிள்ளை சந்தைப்பேட்டையில் உழவர் சந்தை உள்ளது. இந்த சந்தை சுற்றுச்சுவர் அருகில் பொதுமக்கள் நடைபாதையை, நெடுஞ்சாலை துறையினர் சாலை மற்றும் சாக்கடை கட்டும் போது மண்ணைக்கொட்டி அடைத்தனர். ஆனால் இப்பணி சரிசெய்யாமல் அப்படியே கிடப்பில் இருந்து வந்தது. இதனால் பெண்கள் தண்ணீர் பிடிக்க செல்ல வேண்டுமானால் மலைபோல் கொட்டிக்கிடக்கும் மண்ணின் மீது ஏறி, இறங்கி வருகின்றனர். மேலும் உழவர்கள் மற்றும் சந்தைக்கு வரும் நுகர்வோர்கள் நீண்ட தூரம் சுற்றி வரும் நிலை உள்ளது. இதனை அகற்ற நெடுஞ்சாலை துறையினரும், பேரூராட்சி நிர்வாகமும் துரித நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Ilampillai ,
× RELATED சினிமாவை மிஞ்சிய நடுரோட்டில் நடந்த...