×

ராமானுஜபுரத்தில் என்எஸ்எஸ் முகாம்

கும்பகோணம், டிச. 19: சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் கல்லூரி சார்பில் ராமானுஜபுரம் மற்றும் உமையாள்புரத்தில் வருடாந்திர என்எஸ்எஸ் சிறப்பு முகாம் நடந்தது.இதில் மருத்துவ முகாம், டெங்கு விழிப்புணர்வு, சுற்றுப்புற தூய்மை, நிலவேம்பு குடிநீர் வழங்குதல், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு, வாக்காளர் விழிப்புணர்வு பேரணி, பிளாஸ்டிக் பைகள் இல்லாத இந்தியாவை உருவாக்குதல், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்குதல், யோகா மற்றும் தியான பயிற்சி, மரக்கன்றுகள் நடும் பணிகள் நடந்தது.

இதையடுத்து நடந்த என்எஸ்எஸ் முகாம் நிறைவு விழாவுக்கு கல்லூரி முதல்வர் பாலமுருகன் தலைமை வகித்தார். என்எஸ்எஸ் திட்ட அலுவலர்கள் ஆனந்தகுமார் வரவேற்றார். டிஎஸ்பி நந்தகோபால் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மாணவர்களுக்கு கேடயம், சான்றிதழ் வழங்கினார். பேராசிரியர் சதீஷ்குமார், ஜெஆர்சி திட்ட அலுவலர் ஜோசப் ஆரோக்கியம், இசை பயிற்சியாளர் செந்தமிழ்செல்வன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். அருண் நன்றி கூறினார்.

Tags : NSS Camp ,Ramanujapuram ,
× RELATED ஊராட்சி தலைவரின் கணவர் மீது காவல் நிலையத்தில் புகார்