×

கறம்பக்குடி பகுதியில் அனுமதியின்றி மது விற்ற 4 பேர் கைது

கறம்பக்குடி,டிச. 19: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியில் அனுமதியின்றி மதுபானம் விற்று வருவதாக காவல் துறையினருக்கு தகவல் வந்தது. இதை தொடர்ந்து கறம்பக்குடி காவல் துறையினர் சோதனை ஈடுபட்டதில் கறம்பக்குடி அருகே பட்டத்திக்காடு கிராமத்தில் தவமணி, மஞ்சு விடுதி கிராமத்தில் இளங்கோவன் , நெய்வேலி வட பாதி கிராமத்தில் செந்தில் மற்றும் மைலான் கொன்பட்டி கிராமத்தில் ரெங்கராஜ் ஆகியோர் மது விற்றுக்கொண்டிருந்தனர். அவர்களிடம் இருந்து 40 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

Tags : Karambakkudy ,area ,
× RELATED ராட்சத அலையில் சிக்கியவர் பலி