×

பெண்ணாடத்தில் அரச மரத்தை வெட்டி எடுத்து சென்றவர் கைது

விருத்தாசலம், டிச. 19: பெண்ணாடம் அருகே உள்ள வெண்கரும்பூர் கிராமத்தில் கடந்த அக்டோபர் மாதம் 20ம் தேதி நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான பழமை வாய்ந்த அரசமரம் மழையால் முறிந்து விழுந்தது. இதனை நெடுஞ்சாலை துறைக்கே தெரியாமல் சிலர் மரத்தை வெட்டி லாரியில் கொண்டு சென்றுவிட்டதாக திட்டக்குடி நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சாலை ஆய்வாளர் சக்திவேல் கொடுத்த புகாரின் பேரில் பெண்ணாடம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், முறிந்து விழுந்த மரத்தை அதே கிராமத்தை சேர்ந்த அரங்கநாதன் மகன் சிதம்பரநாதன்(36) என்பவர் ஆட்களை வைத்து வெட்டி எடுத்துச் சென்றது தெரியவந்தது. எடுத்துச் சென்ற அரச மரத்தின் மதிப்பு சுமார் ரூ.10 ஆயிரம் இருக்கும் என வருவாய்த் துறையினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சிதம்பரநாதன் மீது போலீசார் வழக்குப் பதிந்து தேடி வந்தனர். இந்நிலையில் பெண்ணாடம் பழைய பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்த சிதம்பரநாதனை பெண்ணாடம் போலீசார் பிடித்து கைது செய்தனர்.

Tags : Pennadam ,
× RELATED கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே லஞ்சம் பெற்ற விஏஓ கைது..!!