×

திடீர் மறியலால் பரபரப்பு திருவாரூரில் கமலாலய குளத்தில் விரைவில் படகு சவாரி துவங்க வேண்டும்

திருவாரூர், டிச.19: திருவாரூரில் பழுதாகி உள்ள படகினை சரிசெய்து கமலாலயக் குளத்தில் படகு சவாரியினை துவக்கிட வேண்டும் என கோயில் நிர்வாகத்திற்கு பொது மக்களும், சுற்றுலாப் பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க கோயிலாக தியாகராஜசுவாமி கோயில் இருந்து வருகிறது. சைவசமய தலங்களில் முதன்மையான தலமாக இருந்து வரும் இக்கோயில் 5 வேலி நிலப்பரப்பினை கொண்டது. இதேபோல் இதற்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் ஆழித்தேரும், கமலாலய குளமும் இருந்து வருகிறது. கோயிலின் முக்கிய விழாக்களில் ஒன்றான ஆழி தேரோட்டத்திற்கு பின்னர் இந்த கமலாலய குளத்தில் தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம். கோயிலைப் போன்றே 5 வேலி பரப்பளவினை கொண்ட இந்த குளத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் படகு சவாரி போக்குவரத்தானது முந்தைய திமுக ஆட்சிக் காலத்தின்போது துவங்கப்பட்டது. இதனையடுத்து ஆயில் இன்ஜின் பொருத்தப்பட்ட படகு ஒன்றும், காலால் சுற்றி செல்லும் பெடலிங் படகு ஒன்றும் என 2 படகுகள் மூலம் நகரில் உள்ள பொதுமக்கள், சிறுவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் என அனைவரும் இந்த குளத்தை சுற்றி பார்த்து வந்தனர்.

இந்நிலையில் இந்த படகின் இன்ஜினில் ஏற்ப்பட்டுள்ள பழுது காரணமாக கடந்த ஓராண்டிற்கும் மேலாக இந்த படகு சவாரி என்பது இல்லாமல் இருந்து வருகிறது. இதேபோல் பெடலிங் படகு என்பதும் பழுதாகி ஓரங்கட்டப்பட்டுள்ளதன் காரணமாக இந்த குளத்தில் படகு சவாரி என்பது தடைபட்டுள்ளது. தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்படவுள்ள நிலையில், நகரில் உள்ள பொதுமக்கள் மற்றும் சிறுவர்களை கவரும் வகையிலும், சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும் உடனடியாக இந்த குளத்தில் படகு சவாரியினை துவங்கிட வேண்டும் என பொது மக்களும் சுற்றுலாப் பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து கோயில் நிர்வாகத்திடம் கேட்டபோது, இஞ்சின் பழுது காரணமாக படகு சவாரி தடை பட்டுள்ளது என்றும் விரைவில் என்ஜின் பழுது நீக்கப்பட்டு படகு சவாரிக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : boat ride ,Kamalalaya Pond ,Thiruvarur ,crash ,
× RELATED 6,417 மாணவர்கள் புதிதாக சேர்க்கை: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல்