×

தயார் நிலையில் வாக்குச்சாவடிகள் நாகையில் ஓய்வூதியர் தினவிழா

நாகை. டிச.19: நாகையில் தமிழ்நாடு ஓய்வூதியர் தின விழா நடைபெற்றது.நாகையில் தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஓய்வூதியர் தின விழா கூட்டம் நடந்தது. சங்க கூட்டமைப்பு தலைவர் பக்கிரிசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் நடராசன், ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நல அமைப்பின் மாநிலக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன், மத்திய அரசு ஓய்வூதியர் சங்கம் மணி ஆகியோர் பேசினர். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன், ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் காந்தி, வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் இளவரசன், புள்ளியியல் சார்நிலை அலுவலர் சங்க மாநிலத் தலைவர் அந்துவன் சேரல், நாகை தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் சிவகுமார், ஓய்வு பெற்ற போக்குவரத்து நல அமைப்பின் நிர்வாகி கணபதி, அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாநில செயலாளர் மனோகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஓய்வுபெற்ற போக்குவரத்து நல அமைப்பின் நிர்வாகி ஜீவானந்தம் நன்றி கூறினார்.

Tags : Pensioners Day ,Nagapattinam ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலின்போது கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டும்