×

திருச்சுழி அருகே நிலத்தகராறில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு இருவர் மீது போலீசார் வழக்கு

திருச்சுழி, டிச. 18:திருச்சுழி அருகே நிலத்தகராறில் மூவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக இருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சுழி அருகே உள்ள அம்மன்பட்டியைச் சேர்ந்த ராமச்சந்திரன் மனைவி கிழவியம்மாள் (48). அதே ஊரைச் சேர்ந்தவர். மாரிமுத்து (55). உறவினர்களான இவர்கள் இருவருக்கும்   ஏற்கனவே நிலத்தகராறு இருந்து வந்தது. இதனால் அவ்வப்போது வாய்தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வழக்கம் போல் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில் மாரிமுத்து, அவரது சகோதரர் வீரசிங்கம் ஆகிய இருவரும் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து கிழவியம்மாள், அவரது கணவர் ராமச்சந்திரன், அவரது மகன் ராஜபிரபு ஆகியோரை வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த மூவரும் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து ராஜபிரபு கொடுத்த புகாரின் பேரில் மாரிமுத்து, வீரசிங்கம் மீது வழக்கு பதிந்து திருச்சுழி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : persons ,Trichy ,
× RELATED 3,288 நபர்கள் தபால் வாக்கு செலுத்தினர்