×

சேலம் ஷோரூமில் சொகுசு கார் திருடிய கொள்ளையன் கைது

சேலம், டிச.18: சேலத்தில் ஷோரூமில் இருந்து சொகுசு கார் திருடிய கொள்ளையன், வாழப்பாடியில் ஆட்டோவை கடத்திய போது சிக்கினார். சேலம் மாவட்டம், தாரமங்கலத்தை சேர்ந்தவர் தேன்மொழி. இவரது சொகுசு காரை, சூரமங்கலத்தில் உள்ள ஷோரூமில் சர்வீசுக்காக விட்டிருந்தார். பழுது நீக்கப்பட்டு கார் தயாரான நிலையில், நேற்று முன்தினம் காலை, ஷோரூம் முன்பு நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது அங்கு வந்த மர்ம நபர், உரிமையாளர் காரை எடுத்து வரச்சொன்னதாக கூறி, தேன்மொழியின் சொகுசு காரை திருடிச் சென்றார். இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை, வாழப்பாடி போலீஸ் ஸ்டேசனுக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ ஒன்றை, மர்மநபர் எடுத்துச் செல்ல முயன்றார். இதைக்கண்ட பொதுமக்கள் அவரை மடக்கிப்பிடித்து, வாழப்பாடி போலீசில் ஒப்படைத்தனர். அங்கு மேற்கொண்ட விசாரணையில், பிடிபட்டவர் ஆத்தூர் விநாயகபுரத்தைச் சேர்ந்த முருகன் (28) என்பதும், சேலம் சூரமங்கலத்தில் ஷோரூமில் இருந்து காரை திருடிச்சென்றவர்  என்பதும் தெரிந்தது. இதனையடுத்து, ஆட்டோவின் உரிமையாளர் சூரியபிரகாஷ் அளித்த புகாரின் பேரில், முருகனை கைது செய்த போலீசார், சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து சொகுசு கார் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்யப்பட்டது.

Tags : Salem showroom ,
× RELATED வையப்பமலையில் பக்தர்கள் கிரிவலம்