×

அரசு ஐடிஐயில் மாணவர்களுக்கு எய்ட்ஸ் விழிப்புணர்வு

ஊத்தங்கரை, டிச.18: ஊத்தங்கரை  அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் உலக  எய்ட்ஸ் தினத்தையொட்டி, எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு  கல்லூரி முதல்வர் எப்சிபா ஏஞ்சலா துரைராஜ் தலைமை வகித்தார். ஊத்தங்கரை  செஞ்சிலுவை சங்க தலைவர் டாக்டர் தேவராசு, துணைத்தலைவர் ராஜா, எய்ட்ஸ்  கட்டுப்பாட்டு அலகு மாவட்ட மேற்பார்வையாளர் அருள், குமார், குணசேகரன்,  சையது பயாஸ் பாஷா ஆகியோர் கலந்துகொண்டு எய்ட்ஸ் பரவும் விதம் மற்றும்  தடுக்கும் முறைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கி கூறினர். தொடர்ந்து,  எய்ட்ஸ் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 200  மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை  நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ரம்யாகாந்தி செய்திருந்தார்.

Tags : ITI ,
× RELATED ஐடிஐ பயிற்சியாளர் சேர்க்கைக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்..!!