×

மதுபாட்டிலால் தொழிலாளியை தாக்கிய போதை ஆசாமி கைது

கிருஷ்ணகிரி, டிச.18: கிருஷ்ணகிரி அருகே உள்ள பாலக்குறி பகுதியை சேர்ந்தவர் பெருமாள்(48). கூலி தொழிலாளியான இவர், சின்னபெல்லாரம்பள்ளி பகுதியில் உள்ள மதுக்கடை முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு மது குடித்துவிட்டு வெளியே வந்த அதே பகுதியை சேர்ந்த மோளஹப்பன்(55) என்பவர், பெருமாளிடம் தகராறில் ஈடுபட்டார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மோளஹப்பன், அங்கு கிடந்த காலி மதுபாட்டிலை எடுத்து பெருமாளை சரமாரி தாக்கினார். இதில் பெருமாளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி தாலுகா போலீசார், மோளஹப்பனை கைது செய்து சிறையிலடைத்தனர்.

Tags : Assami ,laborer ,
× RELATED பாஜ ஓபிசி அணி மாநில செயலாளர்-...