×

துறையூர், உப்பிலியபுரம் பகுதிகளில்

துறையூர், டிச.17: துறையூர், உப்பிலியபுரம் பகுதிகளில் உள்ள வீடுகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட சேலம் ஆத்தூர் வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 91 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்திருச்சி மாவட்டம் துறையூர், உப்பிலியபுரம் பகுதியில் பகல் நேரங்களில் வீடுகளில் பூட்டை உடைத்து தொடர் திருட்டு நடந்து வந்தது. இது தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் குருநாதன் தலைமையில் குற்றப்பிரிவு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், மங்கப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே பைக்கில் ஒரு வாலிபர் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் சேலம் மாவட்டம் ஆத்தூர் அம்மபாளையம் கல்ஒட்டர் தெருவை சேர்ந்த வெங்கடேஷ்(24) என்பதும், இவர் துறையூர் மற்றும் உப்பிலியபுரம் பகுதியில் உள்ள வீடுகளில் பூட்டை உடைத்து நகை மற்றும் பொருட்களை திருடி சென்றதும் தெரியவந்தது.

இதை தொடர்ந்து வெங்கடேசனை கைது செய்து போலீசார் அவரிடம் இருந்து 91 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். மற்றும் ஒரு எல்இடி டிவி, பைக் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். பின்னர் துறையூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட வெங்கடேசை துறையூர் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக போலீசார் அழைத்து வந்தனர்.

Tags : Thuraiyur ,Uppiliyapuram ,areas ,
× RELATED முருங்கப்பட்டியில் வேளாண் கல்லூரி...