×

பட்டுக்கோட்டை அருகே முகம் சிதைக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் கொலையா? போலீஸ் விசாரணை

பட்டுக்கோட்டை, டிச. 18: பட்டுக்கோட்டை அடுத்த சூரப்பள்ளம் கழுவன் ஓடை ஏரிக்கரையில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று கிடந்தது.இதை அப்பகுதி வழியாக சென்றவர்கள் பார்த்து சூரப்பள்ளம் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். பட்டுக்கோட்டை தாலுகா போலீசாருக்கு கிராம நிர்வாக அலுவலர் ஜெகன் தகவல் தெரிவித்தார். தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் பட்டுக்கோட்டை தாலுகா போலீசில் கிராம நிர்வாக அலுவலர் ஜெகன் புகார் செய்தார். அதில் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் காயங்களுடன் உள்ளது. இந்த சாவில் சந்தேகம் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

பட்டுக்கோட்டை தாலுக்கா போலீசார் வழக்குப்பதிந்து முகம் சிதைக்கப்பட்ட நிலையில் உள்ளவர் யார், அவர் எப்படி இறந்தார், யாராவது கொலை செய்து ஏரிக்கரையில் வீசினார்களா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Pattukkottai Police ,
× RELATED திருவையாறு நூலகத்தில் உலக புத்தக தின விழா