×

கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் வார்டு உறுப்பினர் பதவிக்கான 8 மனுக்கள் தள்ளுபடி

கந்தர்வகோட்டை, டிச.18: கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் வார்டு உறுப்பினர் பதவிக்கு வேட்பு மனுதாக்கல் செய்ததில் 8 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு 318 பதவிகளுக்கு 1005 பேர் வேட்பு மனுதாக்கல் செய்திருந்தனர். இதில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு வேட்பு மனுதாக்கல் செய்ததில் 8 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் 267 பதவிகளுக்கு 647 பேர் வேட்பு மனுதாக்கல் செய்திருந்தனர். வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நேற்று நடைபெற்றது. இதில் வௌ்ளாளவிடுதி வார்டு 9 பொது வேட்பு மனுதாக்கல் செய்திருந்த அஞ்சையன், நம்புரான்பட்டியில் வார்டு 2க்குமனு செய்திருந்த ரீட்டா, விராலிபட்டியில் வார்டு 9க்கு மனு செய்திருந்த நாகலட்சுமி, மங்கனூர் வார்டு 3க்கு மனு செய்திருந்த துரை செபஸ்தியார், அரவம்பட்டியில் வார்டு 6க்கு மனு செய்திருந்த கண்ணகி, குளத்தூர் சேவியர்குடிகாடு வார்டு 1க்கு மனு செய்திருந்த சுரேஷ், பெரியகோட்டையில் கொத்தகபட்டி வார்டு 2க்கு மனு செய்திருந்த சிவமூர்த்தி, பாலசுப்பிரமணி ஆகியோரது வேட்பு மனுக்கள் பல்வேறு காரணங்களால் தள்ளுபடி செய்துள்ளனர்.

சுந்தம்பட்டியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த செல்லக்கண்ணு (81), அவரது மருமகள் புவனேஸ்வரி (42) ஆகியோர் மட்டும் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர். இதில் ஒருவர் வேட்பு மனுவை வாபஸ் பெற்றாலும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவது உறுதி. வாபஸ் பெறுவதற்கு 19ம் தேதி வரை கெடு உள்ளது. அன்றே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Kandarwagotte Panchayat Union ,
× RELATED இருசக்கர வாகனத்தின் பின்னால் மோதிய கார்