×

மூன்றடைப்பு அருகே விவசாயிக்கு கொலை மிரட்டல்

நாங்குநேரி, டிச. 18: மூன்றடைப்பு அருகே முதலைகுளத்தை சேர்ந்தவர் முருகன் (43). விவசாயியான இவருக்கும், இதே ஊரை சேர்ந்த சுப்பையா மகன் ராஜகோபால் என்பவருக்கும் சீட்டுப்பணம் கொடுக்கல் வாங்கல் மற்றும் இடப்பிரச்சனை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராஜகோபால் வீட்டுக்கு சென்ற முருகன், தனக்கு தர வேண்டிய சீட்டுப்பணத்தை கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை முருகன், தனது தந்தை செல்வராஜிடன் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். அப்போது தோட்டத்தில் உள்ள மோட்டார் பைப் லைன்களையும், சொட்டுநீர் பாசன குழாய்களையும் ராஜகோபால் அரிவாளால் வெட்டி சேதப்படுத்தியதை பார்த்து முருகன் சத்தம் போட்டு தடுத்துள்ளார். அப்போது ராஜகோபால், கையில் வைத்திருந்த அரிவாளை காட்டி எப்படி என் வீட்டுக்கு வந்து சீட்டுப்பணம் கேட்கலாம். இனிமேல் வந்தால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதுகுறித்து முருகன் அளித்த புகாரின்பேரில் மூன்றடைப்பு போலீசார் வழக்கு பதிந்து கொலைமிரட்டல் விடுத்த ராஜகோபாலை தேடி வருகின்றனர்.

Tags : Murder ,floor ,
× RELATED சென்னை திருவொற்றியூரில் விசாரணைக்கு...