அருப்புக்கோட்டை, டிச.17: அருப்புக்கோட்டை சௌடாம்பிகா பாலிடெக்னிக்கில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. கல்லூரி முதல்வர் சந்திரா தலைமை வகித்தார். துணை முதல்வர் கந்தவேல்சாமி முன்னிலை வகித்தார். சென்னை ஜோகோ நிறுவனத்தின் மனித வள அதிகாரிகள் வேலைவாய்ப்பு முகாமினை நடத்தினர். முகாமில் பாலிடெக்னிக் மாணவர்கள் 185 பேர் உள்பட காரியாபட்டி, மதுரை, விருதுநகர், சிவகாசி, தூத்துக்குடி, உள்பட பல்வேறு நகரங்களில் உள்ள பாலிடெக்னிக் மாணவ, மாணவிகள் மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் 450 பேர் கலந்து கொண்டனர். எழுத்துதேர்வு, நேர்முகத்தேர்வு நடந்தது. ஏற்பாடுகளை துறைத்தலைவர்கள் மற்றும் கல்லூரி வேலைவாய்ப்பு அதிகாரிகள் செய்திருந்தனர்.