விருதுநகர், டிச.17: விருதுநகர் பழைய பஸ் நிலையம் முன்பகுதியில் பொதுக்கழிப்பிடம் கட்ட சிபிஎம் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து ஆணையரிடம் புகார் மனு அளித்தனர்.விருதுநகர் நகராட்சி ஆணையர் பார்த்தசாரதியிடம் சிபிஎம் நகர செயலாளர் முருகன் தலைமையில் அளித்த மனுவில், விருதுநகர் நகராட்சி சார்பில் பழைய பஸ் நிலையம் முன்புறம் அண்ணா சிலை அருகில் பொதுக்கழிப்பிடம் கட்ட இருப்பதாக தெரிகிறது.
பேருந்துகள் வந்து செல்லும் முன்பகுதியில் பொதுக்கழிப்பிடம் கட்டினால் இடையூறு ஏற்படும். வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் கழிப்பறைக்கு சென்றுவிட்டு பஸ்நிலையத்திற்குள் நுழையும் போது விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அனைத்து கட்சி கூட்டம் நடத்தி நகரில் பொதுக்கழிப்பிடம் கட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்தனர்.