×

சைக்கிளைப் பயன்படுத்தினால் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம் மூணாறில் விழிப்புணர்வு பேரணி

மூணாறு,டிச.17: கேரள மாநிலம் கொச்சி தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது பெடல் போர்ஸ்  அமைப்பு. சைக்கிள் பயன்பாடு தற்போது பொதுமக்களிடையை குறைந்து வருவதை கருத்தில் கொண்டு சைக்கிள் பயன்படுத்துதல் மூலம் உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சைக்கிள் பேரணி துவங்கப்பட்டுள்ளது. இதில் 20 பேர் கொண்ட இந்த சைக்கிள் பேரணி கொச்சியில் இருந்து நேற்று மூணாறு வந்தடைந்தது. இந்த பேரணிக்கு கேடிஹச்பி  நிறுவன துணைத்தலைவர் வி.வி.கரியப்பா தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. 200 கி.மீ பயணம் செய்து மூணாறு வந்தடைந்த இந்த குழு  உடல் ஆரோக்கியத்திற்கு சைக்கிள் பயன்பாட்டின் பங்கு மற்றும் பிளாஸ்டிக் பொருட்களில் இருந்து சுற்றுசூழலை பாதுகாப்பது எப்படி போன்ற விழிப்புணர்வுகளை பொதுமக்களுக்கு அளித்தனர்.

Tags : Awareness rally ,Munnar ,
× RELATED மாவட்ட நீதிமன்றம் சார்பில் சமரசம் குறித்த விழிப்புணர்வு பேரணி