×

உள்ளாட்சி தேர்தல் பணியில் முன்னாள் ராணுவ வீரர்கள்

திண்டுக்கல், டிச.17: உள்ளாட்சி தேர்தலில் முன்னாள் ராணுவ வீரர்கள் சிறப்பு காவலர்களாக பணியாற்றலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு: திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணியில் முன்னாள் படைவீரர்கள் சிறப்பு காவலர்களாக ஈடுபடுத்தப்பட உள்ளனர். இப்பணிக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்ட உழைப்பூதியம் மற்றும் உணவுப்படி வழங்கப்படும். எனவே திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள், தங்களது அசல் படைவிலகல் சான்று, அடையாள அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றுடன் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள முன்னாள் படைவீரர் நல துணை இயக்குநர், உதவி இயக்குநர்(பொ) அலுவலகத்தில் உடனடியாக நேரில் வந்து தங்களது பெயரை தேர்தல் பாதுகாப்புப் பணிக்குப் பதிவு செய்துகொள்ளலாம். மேலும் நேரில் வந்து பதிவு செய்ய இயலாதவர்கள் திண்டுக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர் நல துணை இயக்குநர் அலுவலகத்திலுள்ள 0451-2460086 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டும் பதிவு செய்யலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Ex-servicemen ,elections ,
× RELATED மக்களவை தேர்தல்: திரிபுராவில் 54.47% வாக்குப்பதிவு