×

வாக்குப்பதிவு மையத்தில் ஆய்வு பாடாலூர் அருகே விவசாய நிலத்தில் வைத்திருந்த 400 கிலோ சின்ன வெங்காயம் திருட்டு

பாடாலூர், டிச. 17: பாடாலூர் அருகே விவசாய நிலத்தில் விதைப்பதற்காக வைத்திருந்த 400 கிலோ சின்ன வெங்காயத்தை மர்மநபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அருகே உள்ள இரூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி செல்வராஜ். இவர் நாரணமங்கலம் கிராமத்தை சேர்ந்த ஒருவருடைய நிலத்தை குத்தகைக்கு எடுத்து சின்ன வெங்காயம் சாகுபடி செய்து வருகிறார். இந்நிலையில் அந்த நிலத்தில் அறுவடை செய்த சின்ன வெங்காயத்தை விவசாய நிலத்திலேயே குவியலாக வைத்திருந்தார். இந்நிலையில் நேற்று காலையில் வழக்கம் போல் விவசாய நிலத்துக்கு சென்று பார்த்த போது குவியலாக இருந்த வெங்காயம் 400 கிலோ இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். அப்போது தான் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் யாரோ திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பாடாலூர் காவல் நிலையத்தில் செல்வராஜ் புகார் செய்தார். சின்ன வெங்காயத்தை திருடி சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Theft ,polling station ,farm ,Patalur ,
× RELATED சென்னை சைதாப்பேட்டை பாத்திமா பள்ளி...