×

இளம்பிள்ளை அருகே மர்ம விலங்கு கடித்து 6 ஆடுகள் பலி

இளம்பிள்ளை, டிச.17: இளம்பிள்ளை அருகே மர்ம விலங்கு கடித்ததில் 6 ஆடுகள் பலியானது. இளம்பிள்ளை அருகே இடங்கணசாலை கிராமம், தூதனூர் அம்மன் கோயில் பகுதியில் வசித்து வருபவர்   பழனியம்மாள் (60). விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இவர் விவசாய வேலைக்கு சென்றது போக வீட்டில் 6 ஆடுகளை வளர்த்து வருகிறார்.

இந்நிலையில், இவர் வளர்த்து வந்த 6 ஆடுகளை நேற்று முன்தினம் இரவு மர்ம விலங்கு பட்டியில் புகுந்து 6 ஆடுகளை கடித்து குதறியது. இதில் 6 ஆடுகள் பரிதாபமாக இறந்தன. காலையில் பட்டியில் பார்த்த போது ஆடுகள் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து வருவாய் துறையினரிடம் தெரிவித்து இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags : Ilampillai ,
× RELATED சினிமாவை மிஞ்சிய நடுரோட்டில் நடந்த...