×

திருச்செங்கோட்டில் சிபிஎம் வேட்புமனு தாக்கல்

திருச்செங்கோடு, டிச.17: ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கலுக்கு நேற்று கடைசி நாள் என்பதால் பிடிஓ அலுவலகங்களில் கூட்டம் அலைமோதியது. கிராமப்புறங்கள் அதிகம் கொண்ட நாமக்கல் மாவட்டத்தில் இறுதிக்கட்ட வேட்பு மனு தாக்கல் களை கட்டியது. திருச்செங்கோடு அருகே எலச்சிப்பாளையம் ஒன்றியம் 5வது வார்டு உறுப்பினர் பதவிக்கு திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட ஒன்றிய செயலாளர் சுரேஷ் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக அங்குள்ள பஸ் ஸ்டாப் பகுதியில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தார். இந்த ஊர்வலத்தில் திமுக ஊராட்சி செயலாளர் சுந்தரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரங்கசாமி, வேலுசாமி, கொமதேக ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : CPM ,Tiruchengode ,
× RELATED அரசு பஸ் டிரைவருடன் தகராறு...