×

கிருஷ்ணராயபுரம் தாலுகா தேவசிங்கம்பட்டி வாக்கு சாவடி மையத்தை மாற்ற கூடாது

கரூர், டிச. 17: கிருஷ்ணராயபுரம் தாலுகா வயலூர் கிராமம் தேவசிங்கம்பட்டி ஊர் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த கோரிக்கை மனு: எங்கள் ஊரில் 300 ஓட்டுக்கள் உள்ளன. காமராஜர் காலத்தில் இருந்து எங்கள் ஊரில் வாக்களித்துள்ளோம், தற்போது உள்ளாட்சி தேர்தலில் தேவசிங்கம்பட்டி வாக்குச்சாவடியில் இருந்து அருகாமையில் பாப்பன்பட்டிக்கு சுமார் 3 கிமீ தூரத்தில் உள்ள வாக்குசாவடிக்கு சென்று வாக்களிக்க வேண்டியது உள்ளது. பாப்பன்பட்டி, திருமேனியூர் ஆகிய இரண்டு இடங்களுக்கு வாக்குசாவடி மாற்றம் செய்யப்பட்டு விட்டது.

வயது முதிர்ந்தோர் அதிகம் உள்ளனர். எனவே இவ்வளவு தூரம் சென்று வாக்களிக்க இயலாத நிலை குறித்து கிருஷ்ணராயபுரம் தாசில்தாரிடம் மனு கொடுத்தும், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தும் பயனில்லாததால் வேறு வழியின்றி தங்களை நாடி வந்துள்ளோம், எனவே உரிய விசாரணை நடத்தி எங்கள் ஊர் தேவசிங்கம்பட்டியிலேயே வாக்களிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வாக்களிப்பதை புறக்கணிப்போம் என அதில் குறிப்பிட்டுள்ளனர்.

Tags : polling booth ,
× RELATED பீகார் இறுதிக்கட்ட தேர்தலில் வன்முறை...