×

முள்ளக்காடு அருகே பைக் மீது அரசு பஸ் மோதி கணவன், மனைவி படுகாயம்

ஸ்பிக்நகர், டிச. 17: முள்ளக்காடு அருகே பைக் மீது அரசு பஸ் மோதியதில் விவசாயியும், அவரது மனைவியும் படுகாயம் அடைந்தனர். தூத்துக்குடி குலையன்கரிசலை சேர்ந்த கசமுத்து மகன் பாலமுருகன் (36) விவசாயி. இவர், தனது மனைவி ஜாக்குலின் (26), மகன் ராஜமுருகன் (1) ஆகியோருடன் பைக்கில் நேற்று  காலை 11 மணிக்கு புறப்பட்டு தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுகொண்டிருந்தார். பொட்டல்காடு அருகே வந்தபோது தூத்துக்குடியில் இருந்து சுப்பிரமணியபுரம் நோக்கி சென்ற அரசு பஸ் இவர்களது பைக்மீது மோதியது. இதில் படுகாயமடைந்த பாலமுருகனும், அவரது மனைவி ஜாக்குலினும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக குழந்தை ராஜமுருகன் காயமின்றி உயிர் தப்பினார். விபத்து குறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Mullakkad ,
× RELATED தூத்துக்குடியில் வீட்டில் பதுக்கி...