ஏரல், டிச. 17: சாயர்புரத்தில் உள்ள தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கட்சியின் அங்கீகார கடிதம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவர் ராமன் தலைமை வகித்தார். முன்னிலை வகித்த தேர்தல் பணிக்குழு உறுப்பினரும், தமிழக இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச்செயலாளருமான ஊர்வசி அமிர்தராஜ், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் போட்டியிடுபவர்களுக்கு கட்சியின் அங்கீகார கடிதத்தை கொடுத்து வழங்கியதோடு தேர்தல் ஆலோசனை வழங்கினார். நிகழ்ச்சியில் வட்டாரத் தலைவர்கள் வைகுண்டம் நல்லகண்ணு, ஆழ்வை கோதண்டராமன், உடன்குடி துரைராஜ் ஜோசப், சாத்தான்குளம் ஜனார்த்தனம், திருச்செந்தூர் சற்குரு, கருங்குளம் பூங்கன், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயசீலன், வக்கீல் பெலிக்ஸ், காங்கிரஸ் எடிசன், ஓபிசி மாவட்டத் தலைவர் தாசன், நகர தலைவர்கள் சாயர்புரம் ஜேக்கப், பெருங்குளம் மூக்காண்டி, வைகுண்டம் சித்திரை, ஆத்தூர் பாலசிங் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.