×

வீரவநல்லூர் அருகே மூதாட்டி மர்ம சாவு

நெல்லை,  டிச.16: வீரவநல்லூர் அருகேயுள்ள புதூரைச்  சேர்ந்தவர் லட்சுமணன் மனைவி திரவியக்கனி(80). இவர்களுக்கு அண்ணாத்துரை  உள்பட 4 பிள்ளைகள் உள்ளனர்.  அனைவருக்கும் திருமணமாகி தனியாக வசித்து  வருகின்றனர். கணவர் இறந்துவிட்டதால்  திரவியக்கனி தனியாக  வசித்து வந்தார். நேற்று காலை மகன் அண்ணாத்துரை, வேலைக்கு  செல்லும்போது தாயை பார்க்க வீட்டுக்கு சென்றபோது பூட்டி  இருந்தது. இதனால் அவர் வெளியில் சென்றிருக்கலாம் என கருதிய  அவர் வேலைக்கு சென்றுவிட்டார். மதியம்   திரும்பி வந்தபோதும் வீடு திறக்காததால் சகோதரி வீட்டில்  தேடியபோதும் அங்கில்லை.

 இந்நிலையில் வீரவநல்லூர் அருகே  வெள்ளநீர் கால்வாய் அருகே மூதாட்டி திரவியக்கனி மர்மமான முறையில் இறந்து கிடப்பது தெரியவந்தது. இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.  தகவலறிந்த வீரவநல்லூர் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிந்து, நடந்து செல்லும்போது மூதாட்டி தவறி விழுந்து இறந்தாரா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : mystery death ,Veeravanallur ,
× RELATED ஸ்காட் பொறியியல் கல்லூரி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி