×

‘செல்போன் பார்க்காதே’ தாய் கண்டிப்பால் மகன் தீக்குளிப்பு வேடசந்தூரில் பரபரப்பு

திண்டுக்கல், டிச. 13: வேடசந்தூரில் செல்போனை பார்க்காதே என தாய் கண்டிப்பால் மனமுடைந்து மகன் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேடசந்தூரை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன். இவர் ஐதராபாத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ரங்கம்மாள். இவர் வேடசந்தூரில் புத்தக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர்களது மகன் குருபிரசாத் (19). பத்தாம் வகுப்பு முடித்த இவர் சிறிது மனநலம் சரியில்லாததால் வீட்டிலே இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை குருபிரசாத் செல்போன் பார்த்து கொண்டிருந்தார். அப்போது தாய் ரங்கம்மாள், குருபிரசாத்திடம் ‘கடைக்கு வந்து எனக்கு உதவி செய்யலாமே, ஏன் செல்போனையே எப்போதும் பார்த்து கொண்டிருக்கிறாய்’ என சத்தம் போட்டு விட்டு கடைக்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்த குருபிரசாத் வீட்டிலிருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து தனது உடம்பில் ஊற்றி தீ வைத்து கொண்டார்.

Tags : fire ,Vedasandur ,
× RELATED ஆம்பூர் தீ விபத்து: 5,000 கோழிகள் உயிரிழப்பு