×

வாகன விபத்தில் பள்ளி மாணவன் பலி

ஸ்ரீபெரும்புதூர், டிச.13: ஸ்ரீபெரும்புதூர் அருகே மணிமங்கலம், காந்தி நகர், 5வது தெருவை சேர்ந்தவர் மதியழகன். இவரது மகன் ஜோதி பிரகாஷ் (16). படப்பை அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தான். நேற்று முன்தினம் ஜோதி பிரகாஷ், தனது நண்பன் காந்திநகரை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (19) என்பவருடன் பைக்கில் படப்பை - புஷ்பகிரி சாலையில் மணிமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அங்குள்ள மதுபான தொழிற்சாலை அருகே சென்றபோது, அடையாளம் தெரியாத லோடு வேன், பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படுகாயமடைந்தனர்.

இதை கண்ட அப்பகுதி மக்கள், உடனடியாக அவர்களை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜோதி பிரகாஷ் இறந்தார். தமிழ்ச்செல்வனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. புகாரின்படி மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனர்.

Tags : School student ,vehicle accident ,
× RELATED சத்தியமங்கலம் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி