செங்கல்பட்டு, டிச.13: செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளதாக கலெக்டர் ஜான்லூயிஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை. செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த வேளாண் பெருமக்களுக்கு, செங்கல்பட்டு மாவட்டத்தின் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம், வரும் 19ம் தேதி காலை 10 மணிக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கில் நடைபெற உள்ளது. இதில் விவசாயில் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு, வேளாண் துறை மற்றும் இதர துறைகள் தொடர்பான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.