×

வீட்டில் புகுந்த மலைப்பாம்பு பிடிபட்டது

கடையம், டிச. 13: கடையத்தில் இரவு நேரத்தில் வீட்டில் புகுந்த மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்தனர். கீழக்கடையம் பாரதி நினைவு நகர் 1வது வார்டில் ஆசிரியர் அந்தோணி தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்றிரவு இவரது வீட்டு முற்றத்தில் பாம்பு ஒன்று புகுந்தது. இதனை கண்ட அந்தோணி கடையம் வனச்சரகத்திற்கு தகவல் கொடுத்தார். வனச்சரகர் நெல்லை நாயகம் உத்தரவின்படி வனக்காப்பாளர் மணி, வேட்டை தடுப்பு காவலர்கள் வேல்ராஜ், முத்துகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மாடிப்படி அடியில் பதுங்கியிருந்த பாம்பு பத்திரமாக மீட்கபட்டது. பிடிபட்ட 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பை கடையம் பீட் அடர்ந்த வனப்பகுதியில் பத்திரமாக விடப்பட்டது.

Tags : house ,
× RELATED சேப்பாக்கம் புதிய அரசு விருந்தினர்...